தொடர் போராட்டம்: கிராம நிர்வாக அலுவலர்கள் முடிவு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவ லர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் மாநில பொதுச் செயலாளர் செல்வன் தலைமையில் நடந்தது. கூட்டத் துக்கு பின்னர் செல்வன் கூறிய தாவது:

கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பி பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15-ல் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மேலும், வரும் மே 22-ம் தேதி கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ஜூன் 2-ம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டமும், ஜூன் 11-ம் தேதி சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன்பு பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத் துவது எனவும் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மாவட்டங்கள்

3 hours ago

சினிமா

3 hours ago

மாவட்டங்கள்

3 hours ago

மேலும்