தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சியினர் எங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்வதில் இருந்தே எங்களுக்கு வெற்றி உறுதி என்பது தெரியவந்துள்ளது என்று டிடிவி.தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தண் டையார்பேட்டை அம்மணி அம்மன் தோட்டப் பகுதியில் அஇஅதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி.தினகரன் நேற்று மாலை வாக்கு சேகரித்தார். முன்னதாக நிருபர் களுக்கு பேட்டி அளித்த அவர், தொடர்ந்து அங்கே மக்கள் மத்தியிலும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எங்கள் மீது புகார் கூறி வருகிறார்கள். தோல்வி பயத்தில் அவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இதிலிருந்தே நாங்கள்தான் வெற்றி பெறப் போகி றோம் என்று தெரிகிறது. தோல்வி பயத்தில் ஜெயலலிதாவின் மர ணத்தைக்கூட அரசியல் வெறியில் அவரை களங்கப்படுத்தும் வகை யில் பிரச்சாரம் செய்து வருகிறார் கள். இருந்தாலும் இத்தேர்தலில் ஓபிஎஸ் அணியினருக்கு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் மரண அடி கொடுப்பார்கள்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எங்க ளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாளைமுதல் 4 நாட்களுக்கு அவர் பிரசாரம் செய்வார். ஓபிஎஸ் அணிக்கு ஜி.கே.வாசன் ஆதரவு அளித்திருப்பது அவரது விருப்பத்தைப் பொருத்தது. அதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
"பதவிக்கு வர முடியவில்லை" என்று மு.க.ஸ்டாலினை அவரைச் சேர்ந்தவர்களே குறைகூறி வருகின் றனர். அவருக்கும், அவரது தந்தைக்கும் நான்கு பேர் சேர்ந்திருந் தால்கூட பொருத்துக்கொள்ள முடியாது.
முதல்வர் எடப்பாடி கே.பழனி சாமி பிரச்சாரம் செய்து கொண்டு தான் இருக்கிறார். அவர் தொடர்ந்து பிரச்சாரத்துக்கு வந்தால் மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல் ஆர்.கே.நகர் தொகுதியிலே முதல்வர் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின்தான் குறை சொல்வார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடரும். எப்படியாவது அதிமுக ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் துடிக்கிறார் என்றார் டிடிவி.தினகரன்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
3 mins ago
தமிழகம்
21 mins ago
இலக்கியம்
7 hours ago
சினிமா
2 mins ago
இலக்கியம்
7 hours ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
45 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago