இலங்கை சிறைபிடித்து வைத்துள்ள 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 94 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாகப்பட்டினம் விழுந்த மாவடியில் இருந்து கடந்த 21-ம் தேதி 5 மீனவர்கள் விசைப் படகில் கடலுக்குள் மீன் பிடிக் கச் சென்றனர். திடீரென அவர் கள் சென்ற படகு பழுதாகி திசைமாறி இலங்கை வல் வெட்டி துறையில் 23-ம் தேதி கரை ஒதுங்கியது. அப்போது இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களை கைது செய்த துடன், அவர்களது படகையும் பிடித்து வைத்துக்கொண்டனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை கைது செய்தது இலங்கை கடற் படையினரின் மனிதாபிமான மற்ற செயலையே காட்டு கிறது.
ஏற்கெனவே தமிழக மீனவர் கள் 24 பேரும், அவர்களது 93 படகுகளும் இலங்கை கடற்படையினர் வசம் உள் ளன. தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்காமல் இருக்கும் இலங்கை அரசின் போக்கு தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து இலங்கை உயர் அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு சென்று, மிகவும் மோசமான நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் தமிழக மீனவர் களின் படகுகள் விடுவிக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பாக் ஜலசந்தி பகுதியில் பாரம்பரிய மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு மறுக்கப்படுவதால், தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டிருக் கிறது. பாக் ஜலசந்தி பகுதி யில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரி மையை மீட்பதற்கு 1974 மற் றும் 1976-ம் ஆண்டு இந்தியா இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எனவே, கடந்த 23-ம் தேதி இலங்கை அரசு சிறைபிடித்த 5 மீனவர்களையும் சேர்த்து 29 மீனவர்கள் மற்றும் 94 மீன் பிடி படகுகளை விடுவிக்க தாங்கள் தனிப்பட்ட முறை யில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர் பாக வெளிவிவகாரத் துறைக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத் தில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
3 hours ago