பல்லாவரம் அருகே குன்றத்தூர் அடுத்த சம்பந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(72). அவரது மனைவி தேவகி(62). மதுப்பழக்கம் உடைய மகாலிங்கம் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் வீட்டில் தினமும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல மகாலிங்கம் குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி மற்றும் மகன் இருவரும் சேர்ந்து இனிமேல் குடித்து விட்டு வீட்டுக்கு வரக்கூடாது என்று கண்டித்து அவரை வெளியேற்றியதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த மகாலிங்கம் மீண்டும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து அங்கிருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். எனினும், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago