மதுபோதையில் வீட்டுக்கு வர தடை: முதியவர் தீக்குளித்து மரணம்

By செய்திப்பிரிவு

பல்லாவரம் அருகே குன்றத்தூர் அடுத்த சம்பந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(72). அவரது மனைவி தேவகி(62). மதுப்பழக்கம் உடைய மகாலிங்கம் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் வீட்டில் தினமும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல மகாலிங்கம் குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி மற்றும் மகன் இருவரும் சேர்ந்து இனிமேல் குடித்து விட்டு வீட்டுக்கு வரக்கூடாது என்று கண்டித்து அவரை வெளியேற்றியதாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த மகாலிங்கம் மீண்டும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து அங்கிருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். எனினும், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்