மயிலாடுதுறையில் போராட்டம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கைது

By செய்திப்பிரிவு

காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் நடைமுறைப் படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

மீத்தேன் எடுக்கும் திட்டத் துக்கு மீண்டும் ஒப்பந்தம் போடப் பட்டுள்ளதற்கும், நெடுவாசல், காரைக்கால் உள்ளிட்ட காவிரிப் படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை வாயு எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் காவிரிப் படுகை முழுவதும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பிரதமர் மோடி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரது உருவ பொம்மை களை எரித்ததுடன், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங் களையும் எழுப்பினர். இதை யடுத்து, உருவ பொம்மைகளை எரித்த 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

40 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்