பெண்கள் தற்சார்பு பெற்று, அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில், "முற்போக்குச் சிந்தனைகள் மூலமே ஒரு சமுதாயம் முன்னேற முடியும். சமுதாயத்தில் பாதியாக உள்ள பெண்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்பும், சம உரிமையும் கிடைத்திட வேண்டும் என்பதே தேமுதிகவின் குறிக்கோளாகும்.
நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு என்பது இன்னும் கானல் நீராகவே உள்ளது. புதியதாக அமையவுள்ள நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஒரு பெண் முதல்வராக இருக்கின்ற தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. கொலை, பாலியல் வன் கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான கொடும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
பல்வேறு இடர்பாடுகளையும் மீறி பெண்கள் தங்களை நிரூபித்துள்ளார்கள். எனவே, பெண்கள் தற்சார்பு பெற்று, அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு பெற வேண்டும்" என விஜயகாந்த் வாழ்த்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago