இலங்கை சிறையில் இருந்து 22 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

By ராமேஸ்வரம் ராஃபி

இலங்கை சிறையிலிருந்து இன்று (வியாழக்கிழமை) ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை, மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.

கடந்த அக்டோபர் 14 அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர்களை சிறைபிடித்தும் அவர்களின் விசைப் படகுகள் ஐந்தினையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை தலை மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மீனவர்களை விசாரித்த நீதிபதி ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரும் வவுனியா சிறைச்சாலையில் காவலில் அடைக்க உத்திரவிட்டார்.

இந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரையும் விடுதலை செய்தும், அவர்களின் விசைப்படகுகள் 5 பற்றிய மேல் விசாரணையை டிசம்பர் 12 அன்றும் ஒத்திவைத்தும் உத்திரவிட்டார்.

ஊர்காவல்துறை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்த 4 ராமேஸ்வரம் மீனவர்களும், இன்று விடுதலை செய்யப்பட்ட 22 ராமேஸ்வரம் மீனவர்களும் இன்று இரவு அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் யாழ்பாணம் சிறைச்சாலையில் நவம்பர் 19ம் தேதி வரையிலும் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்