தமிழகத்தில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி சென்னை கீழ்ப்பாக்கத்தில் வியாழக்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட உள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு, நிலத்தடி நீர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சினை மற்றும் ஈழத்தமிழர் என பல பிரச்சினைகள் உள்ளது. இவற்றில் எதை தேர்தலில் முன்வைப்பது என்று விவாதிக்கப்படும்.
ஆம் ஆத்மி கட்சியில் தமிழகத்தில் இதுவரை 42 ஆயிரம் உறுபினர்கள் சேர்ந்து உள்ளனர். 32 மாவட்டங்களிலும் குழுக்கள் மற்றும் தொடர்பாளர்கள் உள்ளனர்.
கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக நானும், குழு உறுப்பினர்களாக 7 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உல எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயக்குமாரை கட்சி சார்பில் நிற்குமாறு யாரும் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
இந்தியா
13 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
40 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
48 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
33 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago