தமிழகத்தில் தனித்து போட்டி: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி சென்னை கீழ்ப்பாக்கத்தில் வியாழக்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட உள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு, நிலத்தடி நீர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சினை மற்றும் ஈழத்தமிழர் என பல பிரச்சினைகள் உள்ளது. இவற்றில் எதை தேர்தலில் முன்வைப்பது என்று விவாதிக்கப்படும்.

ஆம் ஆத்மி கட்சியில் தமிழகத்தில் இதுவரை 42 ஆயிரம் உறுபினர்கள் சேர்ந்து உள்ளனர். 32 மாவட்டங்களிலும் குழுக்கள் மற்றும் தொடர்பாளர்கள் உள்ளனர்.

கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக நானும், குழு உறுப்பினர்களாக 7 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உல எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயக்குமாரை கட்சி சார்பில் நிற்குமாறு யாரும் கேட்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

13 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

40 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

48 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

33 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்