கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தில் நடப்புக் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது சிறப்பு பிரி வினர்களுக்கான கலந்தாய்வு 27-ம் தேதி நடைபெற்றது. இதை யடுத்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி யது. முதல் நாள் கலந்தாய்வுக்கு மொத்தம் 1084 பேர் அழைக்கப் பட்டிருந்தனர். இதில், ஈரோட்டைச் சேர்ந்த வி.எஸ்.மோகனா, 198.5 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அவர், கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பி.டெக் உணவுப் பதப்படுத்துதல் பிரிவை தேர்வு செய்தார்.
ஈரோடு சென்னிமலையை சேர்ந்த எஸ்.கலைபிரியா, 198.25 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தைப் பிடித்தார். இவர், வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை படிப்பைத் தேர்வு செய்தார். திருப்பூர் மாவட் டம், தாராபுரத்தைச் சேர்ந்த எஸ்.தேன்மொழி, 198 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து 3-வது இடத் தைப் பிடித்தார் இவரும், வேளாண்மை பல்கலையில் பி.எஸ்சி. வேளாண்மை படிப் பைத் தேர்வு செய்தார். முதல் 7 இடங்களைப் பிடித்த மாண வர்களுக்கு சேர்க்கை ஆணையை தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கி னார். பல்கலை. துணைவேந்தர் ராமசாமி உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
சினிமா
38 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
47 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
53 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
கல்வி
1 hour ago