திருமண பந்தத்துக்குள் நுழையவுள்ள மணமகள் தனது தாயுடன் கலந்துகொள்ளும் சந்திப்பு நிகழ்ச்சியை 'தி இந்து' குழுமம் மற்றும் பிளாட்டினம் இவாரா நிறுவனம் இணைந்து 'கல்யாணம் டைரிஸ்' என்ற பெயரில் வரும் ஜூன் 8-ம் தேதி நடத்துகின்றன.
அடுத்த 6 மாதங்களுக்குள் திருமணம் செய்துகொள்ளவுள்ள மணமகள், அவரது தாய் இருவரும் இணைந்து இதில் கலந்துகொள்ள வேண்டும். சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் வரும் 8-ம் தேதி பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த சந்திப்பின்போது ஆரோக்கியம், திருமண திட்டமிடல், நகைகள், ஆடையலங்காரம் மற்றும் தயாரிப்பு என 4 பிரிவுகளில் தகுந்த நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும். தாய் தனது மகளின் திருமணத்துக்கு உரிய வகையில் திட்டமிட இந்த ஆலோசனைகள் உதவியாக இருக்கும்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க www.kalyanamdiaries.com என்ற இணையதளம் மூலமோ, 9710011222 என்ற செல்பேசி மூலமோ முன்பதிவு செய்துகொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
41 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
உலகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
5 hours ago