திருநெல்வேலி அருகே மூன்றடைப்பில் கல்லூரி மாணவி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது சகோதரரான சென்னை தீயணைப்பு படை வீரர் தலைமறைவாகியுள் ளார்.
திருநெல்வேலி அருகே உள்ள மேலமூன்றடைப்பை சேர்ந்த கணே சன் மகள் மாலா (22). பாளை யங்கோட்டை, அரியகுளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது அண்ணன் கிருஷ்ணராஜா (24), சென்னை வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிகிறார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் கிருஷ்ணராஜா தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவில் கிருஷ்ணராஜா வுக்கும், மாலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாலா அரிவாளால் வெட்டப்பட்டார். அவ ரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத் தில் கிடந்த மாலாவை பாளை யங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழி யிலேயே மாலா உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மூன் றடைப்பு இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான கிருஷ்ண ராஜாவை தேடி வருகின்றனர்.
போலீஸார் நடத்திய விசார ணையில், திருமணமாகிவிட்ட தனது முன்னாள் காதலருடன் மாலா தொடர்பு வைத்திருந்த தாகவும், அதைக் கண்டித்த போது மாலாவுக்கும், கிருஷ்ண ராஜாவுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஆன்மிகம்
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago