தி.நகர் சென்னை சில்க்ஸ் தரை தளத்தில் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் முற்றிலும் சேதமடைந்த கட்டிடம் கடந்த 20-ம் தேதி முற்றிலும் இடிக்கப்பட்டது.
கட்டிடத்தின் 6-வது மாடியில் ஒரு பாதுகாப்பு பெட்டகமும், தரை தளத்தில் 2 பாதுகாப்பு பெட்டகங்களும் இருந்தன. அவற்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. சுமார் ரூ.20 கோடியும் வைக்கப்பட்டிருந்தது. கட்டிட இடிபாடுகள் நேற்று அகற்றப்பட்டன. அப்போது, ஒரு பாதுகாப்பு பெட்டகம் மீட்கப்பட்டது. மீதமுள்ள 2 பாதுகாப்பு பெட்டகங்களும் விரைவில் மீட்கப்படும் என கட்டிடத்தை இடித்துவரும் தனியார் நிறுவனத்தினர் கூறினர். மீட்கப்பட்ட பெட்டகத்தில் பண மும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளும் இருந்த தாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
15 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
35 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
43 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
28 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
வணிகம்
9 hours ago