சென்னை பரங்கிமலை பட்ரோடு பகுதியில் ஐசிஐசிஐ வங்கி உள்ளது. நேற்று முன்தினம் காலை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஆனந்தன், ரூ.2 கோடிக்கான காசோலையை (செக்) பணமாக மாற்ற வங்கி ஊழியரிடம் கொடுத்தார். காசோலையில் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆனந்தனுக்கு பணம் கொடுத்ததுபோல் இருந்தது.
சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர் காசோலையை சரிபார்த்தபோது, அது போலியானது என்பது தெரிந்தது. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்க, அவர்களும் அப்படி ஒரு காசோலையை யாருக்கும் கொடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் பரங்கிமலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து ஆனந்தனை கைது செய்தனர். ஆனந்தனிடம் நடத்திய விசாரணையில் போலி காசோலை விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரது நண்பர்கள் கே.கே.நகரைச் சேர்ந்த வெங்கடேசன், மாங்காடு சீனிவாசன், செல்லூர் ஜெயக்குமார், கோடம்பாக்கம் காந்தி ராஜன், சின்மயா நகர் சுதாநந்தன், அண்ணா நகர் ராஜேந்திரன், தேனி முரளி, அருப்புக்கோட்டை ஆசைத்தம்பி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
இந்தியா
14 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago