ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ கத்தில் அறவழியில் போராடிய மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பியது திமுகதான் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழா வில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக பாஜக அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த சிறப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட் டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் மாணவர்கள் அறவழியில் போராட் டம் நடத்தினர். இந்தப் போராட் டத்தில் அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள வேண்டாம் என்பதற் காகவே திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, மாணவர்கள் திருப்பி அனுப்பினர்.
தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலினுடன் இருப்பவர்கள், மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவி, மாணவர்களின் போராட் டத்தை வன்முறை சம்பவமாக மாற்றியுள்ளனர். மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை திசை திருப்பியது திமுகதான். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. வன்முறைக்கு வித்திட் டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் நிரந்தரமானது. இதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 hours ago
தமிழகம்
17 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago