நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் கடந்த 2 நாட்களாக ஆள் சேர்க்கும் முகாம் நடந்தது. உடற்தகுதி, எழுத்துத் தேர்வு முடிவடைந்து, நேற்று சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது. அப்போது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவைச் சேர்ந்த சதீஷ் குமார், சக்திவேல், திருப்பதி, மணிகண்டன், மோகன் ஆகிய 5 பேர்களின் ஆவணங்கள் போலியானவை என தெரியவந்தது.
இதுகுறித்து, ராணுவ அதிகாரி கள் வெலிங்டன் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் தங்கம் தலைமை யிலான போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், 5 பேரும் சமர்ப்பித்த வயது, மாற்று சான்றிதழ் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சான்றிதழ்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்து குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் குன்னூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இளைஞர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
உலகம்
7 hours ago
இந்தியா
9 hours ago