இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசின் சார்பில் 50 ஆயிரம் வீடுகள்: ப.சிதம்பரம் தகவல்

By செய்திப்பிரிவு

இலங்கையில் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்தோருக்கு, இந்தியாவின் நிதியுதவியுடன் 50,000 வீடுகள் கட்டித்தரும் திட்டத்தில் இதுவரை 10,250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்தவர்களுக்காக, கடந்த 31ம் தேதி வரை, 10,250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் 27, 750 வீடுகள் கட்டப்படுகின்றன. இதற்கான நிதியுதவிகள் ஏற்கெனவே இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 5,000 வீடுகளுக்கு, இந்திய அரசின் உதவியால் பராமரிப்புப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதுதவிர 4,000 வீடுகள் இந்திய மற்றும் இலங்கை அரசின் உதவியுடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டித் தரப்படும்.

இதில், முதற்கட்டமாக 1,000 வீடுகள் கடந்த ஜூலை 2012ல் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்தியாவின் சார்பில், 50 ஆயிரம் வீடுகள் இலங்கைத் தமிழர்களுக்குக் கட்டித்தரும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்