குண்டர் சட்டத்தில் 12 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன், உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட, குற்றப் பின்னணி கொண்ட நபர்கள், திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என 12 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில், சதிஷ்குமார் (27), வீரேந்திர குமார் மாதோ(26), ரவிகுமார்(42), பரத்(24), கோபி நாத்(29), லெனின்(28), குணசேக ரன்(24), பிரதீப் ராஜ்(24), சதீஷ்குமார்(27), வினோத்குமார் (22), விக்னேஷ் (24), கார்த்திக் (26) ஆகிய 12 பேரும் நேற்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

24 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்