சமூக வலைதளங்களில் பயணிகளின் குறை தீர்ப்பில் தெற்கு ரயில்வேயில் சேலம் கோட்டம் முதலிடம் பிடித்துள்ளது என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறியுள்ளார்.
இந்திய ரயில்வே, தெற்கு ரயில்வேக்கு ஓர் ஆய்வறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெறப்பட்ட புகார் களுக்கு பதிலளிப்பதில் தெற்கு ரயில்வே யின், சேலம் கோட்டம் மிக விரைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலமாக பெறப் படும் புகார்களுக்கு தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களைவிட சேலம் கோட்டம் விரைவாக, அதாவது 12 நிமிடங்களில் பதிலளித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி கோட்டம்-454 நிமிடங்கள், பாலக்காடு கோட்டம்-402 நிமிடங்கள், சென்னைக் கோட்டம்-151 நிமிடங்கள், திருவனந்தபுரம் கோட்டம்-82 நிமிடங்களில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறியது:
சமூக வலைதளங்களில் பயணிகள் குறை தீர்ப்பில் தெற்கு ரயில்வேயில் சேலம் கோட்டம் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலம் ரயில்வே கோட்டத்தில் திறமையாக செயல்பட்டு பயணிகளின் குறைதீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவரும் சேலம் கோட்ட முதுநிலை வணிகவியல் மேலாளர் விஜுவின் தலைமையிலான வணிகவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
சினிமா
53 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago