ஹோட்டல் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பைக் குறைக்க வலியுறுத்தி வரும் 30-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஹோட்டல்கள், பேக்கரிகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத் தின் கவுரவத் தலைவர் டி.சீனி வாசன் கோவையில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
தற்போது சாதாரண ஹோட் டல்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கு 2 சதவீத வாட் வரியும், ஏ.சி. வசதி உள்ள ஹோட்டல்களில் 2 சதவீத வாட் வரி மற்றும் 6 சதவீத சேவை வரி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.50 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள ஹோட்டல் களுக்கு 5 சதவீதமும், 50 லட்சத் துக்கு மேல் வருமானம் உள்ள ஹோட்டல்களுக்கு 12 சதவீதமும், ஏ.சி. வசதி உள்ள ஹோட்டல் களுக்கு 18 சதவீதமும் வரி விதிக் கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதேபோல, கேட்டரிங் சேவைகளுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
இதனால், ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொருட் களின் விலை பெரிதும் உயரும். ஏற்கெனவே காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஹோட்டல் தொழில் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இந்த நிலையை மேலும் சிக்கலாக்கும்.
எனவே, சாதாரண ஹோட்டல் களுக்கு 2 முதல் 5 சதவீதமும், ஏ.சி. வசதி உள்ள ஹோட்டல்களுக்கு அதிகபட்சமாக 10 சதவீதமும் மட்டுமே வரி விதிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஹோட்டல்களை அடைத்து போராட்டம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்டவை 24 மணி நேரம் மூடப்படும். இதனால் ரூ.500 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
44 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago