புழல் சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 61 பேர் விடுதலை

By செய்திப்பிரிவு

கடந்த அண்டு ஜூலை முதல் நவம்பர் மாதங்களில் சிறை பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 61 பேரை விடுவித்து சென்னை மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் சிறை பிடித்தனர். போலீசில் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனர்வர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை தொடங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதின் அடிப்படையில் 61 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் இருந்து இன்று சனிக்கிழ்மை விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 61 மீனவர்களும் இன்று அல்லது நாளைக்குள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

28 mins ago

விளையாட்டு

55 mins ago

விளையாட்டு

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்