முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால், கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைவாக இருந்த நிலையில், கடும் வெயிலால் மக்கள் வரத்து குறைந்தது மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாதது போன்ற காரணங்களால் கோயம்பேடு சந்தையில் காய்கறி விற்பனை குறைந்து, அவற்றின் விலை தொடர்ந்து குறைவாக இருந்தது. தற்போது தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால், காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, தக்காளி விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.22-க்கு விற்கப்பட்டது. சாம்பார் வெங்காயம் ரூ.85-லிருந்து ரூ.95 ஆகவும், கத்தரிக்காய் ரூ.35-லிருந்து ரூ.50 ஆகவும், அவரைக்காய் ரூ.40-லிருந்து ரூ.45 ஆகவும், பாகற்காய் ரூ.30-லிருந்து ரூ.40 ஆகவும், பீட்ரூட் ரூ.28-லிருந்து ரூ.35 ஆகவும், முருங்கைக்காய் ரூ.25-லிருந்து ரூ.30 ஆகவும் உயர்ந்துள்ளது.
முகூர்த்த நாட்கள் முடிந்ததும், விலை மீண்டும் குறையும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
க்ரைம்
13 mins ago
இந்தியா
22 mins ago
விளையாட்டு
23 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
வாழ்வியல்
10 hours ago