மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.அந்தி அர்ஜூனா மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சட்டப் போராளியுமான அந்தி அர்ஜூனா மும்பையில் கால மானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

வழக்கறிஞர் அந்தி அர் ஜூனாவின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி சார் பிலும், திராவிட முன்னேற் றக் கழகத்தின் சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாராஷ்டிர மாநில தலைமை வழக்கறிஞராகவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனர லாகவும் பணியாற்றிய அந்தி அர்ஜூனா, மனித உரிமை கள் மற்றும் சர்வதேச சட்டங்களில் நிபுணத்துவம் மிக்கவர். ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுகவின் சட்டப் போராட்டத்துக்கு உறுதுணை யாக இருந்தவர்.

அரசியல் சட்டம், நாடாளு மன்ற உரிமைகள் தொடர்பான வழக்குகளில் திறமையாக வாதாடி வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகள் வெளிவர காரணமாக இருந்த அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப் பாகும். அந்தி அர்ஜுனா உடலுக்கு மும்பை பகுதி திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

14 mins ago

சுற்றுலா

17 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

42 mins ago

சினிமா

37 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்