அரசு அதிகாரி போல, காரில் சைரன் விளக்கு பொருத்திக்கொண்டு சுற்றிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் சாலையில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நீலநிற சைரன் விளக்குடன் வந்த காரை போலீஸார் நிறுத்தினர். அரசு வாகனம் என்பதைக் குறிப்பதற்கான ‘ஜி’ என்ற சிவப்பு நிற எழுத்து, பதிவெண் பலகையில் எழுதப் பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீ ஸார், காரை ஓட்டிவந்த நபரை கீழே இறக்கி விசாரித்தனர்.
அவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த ஜாபர் அலி. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்று தெரியவந்தது. அதிகாரிகள் போல பந்தாவாக செல்வதற்காக காரில் சைரன் பொருத்திக்கொண்டதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். சைரன் வைத்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு அதிகாரி என்று கூறி யாரிடமாவது அவர் மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago