பெண்ணிடம் 10 சவரன் செயின் பறிப்பு

By செய்திப்பிரிவு

கொளத்தூரில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.

சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி லோகநாயகி. புதன் கிழமை மாலையில் வீட்டருகே உள்ள கடைக்கு லோகநாயகி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்து வந்த இரண்டு பேர் லோகநாயகி அணிந்திருந்த 10 சவரன் செயினை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து கொளத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்ச் மாதத்தில் மட்டும் கொளத்தூர் பகுதிகளில் 14 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் காவல் துறையினர் இதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

10 mins ago

விளையாட்டு

26 mins ago

வாழ்வியல்

35 mins ago

ஓடிடி களம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்