இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றி தகவல் அளித்தால் தலா ரூ.2 லட்சம்: சிபிசிஐடி போலீஸார் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கோவை இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேர் பற்றி தகவல் தெரிவித்தால் தலா ரூ.2 லட்சம் வீதம் பரிசு என அறிவித்துள்ளனர்.

கோவையில் இந்து முன்னணி மாவட்ட மீடியா பிரிவு பொறுப்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016 செப்டம்பர் 22-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த சதாம், அதே பகுதியை சேர்ந்த முபாரக் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். இவர்கள் நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸார் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனாலும், அவர்கள் இதுவரை நேரில் ஆஜராகவில்லை.

இவர்களைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும் தகவல் அளிக்கும் நபர்கள் பற்றிய விபரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல் அளிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்: கோவை சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.அனந்தகுமார் (94981 04409), ஆய்வாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் (94981 74230) கட்டுப்பாட்டு அறை (044 28512500), கோவை சிபிசிஐடி அலுவலகத்துக்கு (0422 2241752) தகவல் தெரிவிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்