ராமேஸ்வரம் தீவில் பாம்பன் வட கடல் பகுதி சீற்றமாகக் காணப்பட்டது. பாம்பன் வட கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் வட கடலில் சீற்றம் ஏற்பட்டு உள்ளது.
சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் பாம்பனில் வீசிவருகிறது. இதனால் பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் 7 அடி உயரத்துக்கு கடல் அலைகளின் சீற்றம் காணப்பட்டது.
பாம்பன் வட கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மீனவர்ககள் சேதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் கடல் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
பாம்பன் வட பகுதியில் கடலை ஒட்டிய குடிசைகளுக்குள் கடல் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.பாம்பன் மீனவர்களுக்கு சனிக்கிழமை ஓய்வுநாள் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
தமிழகம்
16 mins ago
இந்தியா
34 mins ago
ஜோதிடம்
9 mins ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
3 hours ago