அமைச்சர்கள் சொன்னாலும் ஓபிஎஸ் நிபந்தனைக்கு கட்டுப்பட முடியாது. பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து எடுக்கும் முடிவு எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
சசிகலா குடும்பத்தை கட்சி, ஆட்சியில் ஒதுக்கிவைக்க அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் முடிவெடுத்து பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும் சில எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெற்றிவேல், சுப்பிரமணி, தங்க தமிழ்ச்செல்வன், செல்வமோகன்தாஸ், ஜக்கையா, கதிர்காமு ஆகிய 6 எம்.எல்.ஏக்களும் செவ்வாய்க்கிழமை டிடிவி தினகரனின் அடையாறு இல்லத்துக்கு வருகை புரிந்து ஆலோசனை நடத்தினர். விபி கலைராஜன், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் தினகரன் இல்லத்துக்கு வருகை தந்தனர்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறுகையில், ''முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சில நிபந்தனைகள் விதித்தார். ஆனால், அமைச்சர்கள் சொன்னாலும் ஓபிஎஸ் நிபந்தனைக்கு கட்டுப்பட முடியாது. பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து எடுக்கும் முடிவு எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.
கட்சிக்கு காலம் தந்த தலைவன் தினகரன் மட்டும்தான். நேற்றைக் காட்டிலும் கழகம் வலுவோடும் பொலிவோடும் தினகரன் தலைமையில் விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும்.
ஜெயக்குமாரை நிதியமைச்சராக்கியது தினகரன்தான்'' என்றார் நாஞ்சில் சம்பத்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
53 mins ago
கல்வி
50 mins ago
தமிழகம்
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
சுற்றுலா
2 hours ago