ஆர்.கே.நகரில் கங்கை அமரன் கண்டிப்பாக வெற்றி பெறுவார்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

ஆர்.கே.நகரில் கங்கை அமரன் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று கொருக்குப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது. பாஜக சார்பில் மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்ட பலம்பொருந்திய தமிழகம் அறிந்த கங்கை அமரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

இதுவரை எத்தனையோ கட்சிகளுக்கு வாய்ப்பளித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் இந்த முறை பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பாஜக வென்றால் ஆர்.கே.நகர் தொகுதியை தத்தெடுத்து முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம்'' என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

சினிமா

40 mins ago

தொழில்நுட்பம்

52 mins ago

தமிழகம்

58 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்