கோவையில் அரசு, தனியார் மருத் துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் 16 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படு கிறது. இக்காய்ச்சல் அறிகுறியுடன் அதிகபட்சமாக 29 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
கோவையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் அதிகரித்துள்ளன. சீதோஷ்ண நிலை மற்றும் சுகாதாரக் குறைபாடு காரணமாக இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மற்ற நோய் பாதிப்புகளுடன் உள்ளவர்கள், பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதும் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அப்படி, கடந்த வாரம் வரை 11 பேர் உயிரி ழந்தனர். அதைத் தொடர்ந்து பிப்.17-ம் தேதி சிங்காநல்லூரை சேர்ந்த பெண் ஒருவரும், ராம நாதபுரத்தை சேர்ந்த 56 வயது நபரும் கோவை அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தனர். பிப்.18-ம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். நேற்று பழனி யைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரி ழந்தார்.
இதேபோல சின்னமேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனை மருத்துவர் கள் கூறும்போது, ‘கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச் சல் அறிகுறியுடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது (நேற்றைய நிலவரப்படி) 29 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.
கோவை சுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதியிடம் கேட்டபோது, ‘பன்றிக் காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை. நோய் அறிகுறியுடன் இருந்தவர்கள் வேறு பல நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதுவே இறப்புக்குக் காரணம். இருந்தாலும் நோய்த் தடுப்புக்கு முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
57 mins ago
சினிமா
5 mins ago
விளையாட்டு
19 mins ago
சினிமா
28 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago