எடப்பாடி பழனிச்சாமி அரசை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஓபிஎஸ் தலைமையில் தர்ம யுத்தத்தை தொடர்வோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மதுசூதனன் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் அவரது அணியில் உள்ள இ.மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், செம்மலை, எஸ்.பி.சண்முகநாதன், செம்மலை, பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ''ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை சசிகலா வழங்கியுள்ளார். ஜெயலலிதா இதுபோன்ற பதவியை யாருக்கும் வழங்கியதில்லை. ஜெயலலிதா மறைவுக்கு இவர்கள் தான் காரணம் என மக்கள் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி அரசை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஓபிஎஸ் தலைமையில் தர்ம யுத்தத்தை தொடர்வோம்'' என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
3 mins ago
இந்தியா
2 mins ago
இந்தியா
6 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
12 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
29 mins ago
இந்தியா
50 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago