‘தி இந்து’ சார்பில் நடைபெறும் இரண்டு நாட்கள் மெகா வேலை வாய்ப்பு முகாம், சென்னையில் நடக்கிறது. இந்த முகாமில் 13 பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
‘தி இந்து’ நிறுவனத்தின் சார்பில், இரண்டு நாட்கள் நடைபெறும், மெகா வேலை வாய்ப்பு முகாம், சென்னை ராஜா அண்ணா மலை புரத்திலுள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.
பல்வேறு கல்லூரிகளில் பொறி யியல், கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்ற 1,380 பட்டதாரிகள் முகாமுக்கு வந்து, நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். இதில் 25 வகைப்பட்ட பணிகளுக்கு, 120 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
இதில் பெங்களூரைச் சேர்ந்த ஆதித்யா பிர்லா, தமிழகத் தைச் சேர்ந்த ‘தி இந்து’, போலா ரிஸ், சதர்லேண்ட், அஜுபா சொல்யூஷன்ஸ், ஏ.ஜி.எஸ்., ஹிந்துஜா குரூப் சொல்யூஷன்ஸ், என்.ஐ.ஐ.டி., கேட் சென்டர், எம்.எம்.சி.இன்போடெக், விவேக்ஸ், ஐ.ஐ.கே.எம் உள்ளிட்ட நிறு வனங்கள் பங்கேற்றன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை, விருப்ப முள்ள பட்டதாரிகள், தங்களது சான்றிதழ்களுடன் வந்து, நேரில் முகாமில் பங்கேற்கலாம் என்று, ’தி இந்து’ நிறுவன மார்க்கெட்டிங் துறை அதிகாரி கிரண் சுதாகரன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago