வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் இளைஞரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த இளைஞர் கார்த்திக். இவர் அப்பகுதியில் உள்ள அசோக் நகரில் வெற்றிலைப் பாக்கு கடை நடத்துகிறார். நேற்று இரவு 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென ஆயுதங்களுடன் கார்த் திக்கை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
சத்தம் கேட்டு அருகே இருந்த வர்கள் ஓடி வந்ததால், கும்பல் தப்பி ஓடிவிட்டது. தாக்குதலில் படுகாயம் அடைந்த கார்த்திக்குக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் வியாபாரிகளிடம் மாமூல் வேட்டை நடத்தும் ரவுடிகள் என்றும், கார்த்திக் மாமூல் தர மறுத்ததால் வெட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வியாசர் பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago