வெள்ளிக்கிழமை ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது: தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், ஜல்லிக்கட்டுக்குத் தடையாக உள்ள பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர் நல அமைப்புகள், விவசாய சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் 20-ம் தேதி முழு கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்தன.

இதைத் தொடர்ந்து தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்குகிறது. இதனால் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது. தமிழகத்தில் 10 லட்சம் வாகனங்கள் ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்