36 மீனவர்கள் ராமேசுவரம் திரும்பினர்: படகுகளை மீட்கக் கோரி கண்ணீர்

By செய்திப்பிரிவு

கடந்த 2 மாதங்களில் தமிழக மீனவர்கள் 76 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஐ.நா சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் வலியுறுத்தினார். அதன்பேரில், தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்ச உத்தரவிட்டார்.

முதல் கட்டமாக, அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 36 பேரை, வியாழக்கிழமை இந்திய கடற்படையிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். மீனவர்கள் 36 பேரும் வியாழக்கிழமை மாலை மண்டபம் கடற்படை முகாமை வந்தடைந்தனர்.

தாயகம் திரும்பிய மீனவர்கள் கூறியதாவது:

‘தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 79 படகுகள் இலங்கை கடற்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 11 படகுகள் நீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டன. மேலும் படகுகள் சேதமடைவதற்குள் அவற்றை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

45 mins ago

சுற்றுச்சூழல்

47 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்