மின்-ஆளுமை திட்ட சிறப்பு மேலாளர்கள் விரைவில் நியமனம்: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

தமிழக அரசில் மின்-ஆளுமை திட்டத்தை சிறப்பாகச் செயல் படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட் டத்திலும் விரைவில் சிறப்பு மேலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சாதி சான்று, இருப்பிடச் சான்று, வருமான சான்று, முதல் தலை முறை பட்டதாரி சான்று, கணவனால் கைவிடப்பட்ட பெண் களுக்கு சான்று உள்பட அரசு வழங்கும் பல்வேறு விதமான சான் றிதழ்களை பொதுமக்கள் ஆன் லைனில் விண்ணப்பித்து விரை வாக பெறும் வகையில் மின்-ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கி வரும் மாவட்ட மின்- ஆளுமை சங்கம் மூலமாக இத்திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் மின்-ஆளுமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற் கென மின்-ஆளுமை மேலாளர் களை நியமிக்க அரசு முடிவுசெய் துள்ளது.

ஆன்லைன் தேர்வு மற்றும் கல்வித்தகுதி மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினீ யரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பில் பிஇ அல்லது பிடெக் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், எம்சிஏ பட்டதாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக் னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினீயரிங் படிப்பில் எம்.எஸ்சி பட்டம் பெற்றோரும் விண்ணப்பிக்க தகுதியுடைவர் ஆவர்.

நவம்பர் 15 ஆன்லைன் தேர்வு

எஸ்எஸ்எல்சி தொடங்கி அனைத்து கல்வித் தகுதிகளிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப் பெண் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். வயது 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வுக்கு 50 மதிப்பெண்ணும், கல்வித் தகுதி களுக்கு 50 மதிப்பெண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் தேர்வில், கம்ப் யூட்டர் தொடர்பான அடிப்படை விஷயங்கள், சி, சி பிளஸ் பிளஸ், ஜாவா, நெட்வொர்க்கிங், இன்டர்நெட் தொழில்நுட்பம், ஹார்ட்வேர், டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் மற்றும் ஐ.டி. துறையின் அண்மைக்கால வளர்ச்சி ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஆன்லைன் தேர்வு நவம்பர் 15-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு சொந்த மாவட்டத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் நவம்பர் 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மின்-ஆளுமை முகமை அறிவித்துள்ளது. மின்-ஆளுமை மாவட்ட மேலாளர் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ.23,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

52 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

மேலும்