ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டுமென நெடுவாசலில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, புதுக் கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 2-ம் கட்டமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. 66-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு, தற்போது அந்த திட்டத்தை ரத்து செய்ய மறுக்கிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரும், மாநில அரசு மவுனமாக இருந்து வருகிறது. மீத்தேன் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்ததைப்போல, தற்போதைய தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்து நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தீர்மானம் இயற்ற வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
க்ரைம்
26 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
4 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
4 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
1 hour ago