மீத்தேன் திட்டத்தைக் கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 24-ம் தேதி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் முடிவு செய்துள்ளது.
இந்த அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின்னர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இயக்கத்தின் அமைப்பாளர் கே.கே.ஆர்.லெனின் கூறியது: மீத்தேன் திட்டத்தை கைவிடக் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு அமைக்கக் கோரியும், மரபணு மாற்று விதைகளை தடை செய்யக் கோரியும் அக். 24-ல் தமிழகம் முழுவதும் முழு வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு கோரப்படவுள்ளது. மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும், முழு வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கியும் கிராமங்களில் செப். 16 முதல் அக். 20 வரை மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
தஞ்சை அருகேயுள்ள பூண்டியில் ஓஎன்ஜிசி துரப்பண பணியைக் கைவிட வலியுறுத்தி, மக்களைத் திரட்டிப் போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago