மேள, தாளம் முழங்க அழைத்து வரப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்: அவதியடைந்த நோயாளிகள்

By செய்திப்பிரிவு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு அமைச்சர் விஜயபாஸ்கரை மாப்பிள்ளை போன்று மேள, தாளம் முழங்க அழைத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த’ எனும் எம்.ஜி.ஆர். பாடல், இன்று வரை திருமண வீடுகளில் ஒலிக்கப்படும் பிரசித்திப்பெற்ற பாடலாகும். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதே பாடலை சாக்ஸஃபோனில் இசைத்து, ட்ரம்ப் செட் இசையுடன் மேள, தாளங்கள் முழங்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நிகழ்ச்சியொன்றுக்கு அழைத்து வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இருபுறமும் மருத்துவ மாணவர்களை நிற்கவைத்து மாப்பிள்ளை போல அழைத்து வரப்பட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர். இந்த நிகழ்ச்சியால் ஏற்பட்ட இரைச்சலால் மருத்துவமனைக்கு வந்திருந்த புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகே அமைச்சர் விஜயபாஸ்கர், இசைக்குழுவினரை ஒலி எழுப்புவதை நிறுத்தச் சொன்னார்.

குட்கா முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை வளையத்திற்குள் இருப்பவர்களுள் அமைச்சர் விஜயபாஸ்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்