மதுரவாயலில் கத்திக்குத்து காயங்களுடன் ரவுடியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் யார் என போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் மார்க்கெட் பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் மதுரவாயல் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சமபவ இடத்திற்கு வந்த போலீஸார் இளைஞர் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளைஞர் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் விருகம்பாக்கம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மணி (எ) புறாமணி என்பது தெரியவந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து சென்றவர் அதன் பின்னர் என்ன ஆனார் என்று தெரியவில்லை என அவரது உறவினர்கள் தேடிய நிலையில் இன்று காலை அவரது உடல் மதுரவாயல் பகுதியில் கத்திக்குத்துக் காயங்களுடன் கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மணி கொலை செய்யப்பட்டது எப்படி அவரை கொலை செய்தது யார், முன் பகையா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அவரை கொலை செய்த பின்னர் உடலை இங்கு கொண்டுவந்து போட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புறா மணி மீது 2017-ம் ஆண்டு வடபழனி காவல் நிலையத்தில் போலீஸ் ஒருவரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கு உள்ளது என்றும், செயின்பறிப்பு, வழிப்பறி போன்ற பல வழக்குகள் அவர் மீது உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
உலகம்
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
9 hours ago