சென்னை அண்ணா சாலையிலி ருந்து கருணாநிதி நினைவிடம் வரை தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று அமைதிப் பேரணி நடத்துகிறார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைந்து சில நாட்கள் அமைதியாக இருந்த அழகிரி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்'' என்றார்.
இதைத் தொடர்ந்து செப். 5-ம் தேதி கருணாநிதி நினை விடத்துக்கு அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையிலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை அழகிரி அமைதிப் பேரணி நடத்துகிறார். இதுதொடர்பாக அழகிரி கூறும்போது, ‘‘பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். எனது அடுத்தகட்ட நடவடிக் கையை பேரணியின் முடிவில் அறிவிப்பேன்'' என்றார்.
திமுக நிர்வாகி நீக்கம்
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அழகிரியை வரவேற்ற சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் மு.ரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
தொழில்நுட்பம்
16 mins ago
இந்தியா
5 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago