கோவையில் ஐஎஸ் ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது

By பிடிஐ

கோயம்புத்தூரில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போத்தனூர் போலீஸார் தெரிவித்தனர்.

முகம்மது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் ஷபிபுல்லா ஆகியோர் வீடுகளில் நேற்று முன்தினம் (ஜூன் 13) போலீஸார் சோதனை நடத்தினர். சோதனையின்போது சில டிஜிட்டல் சாதனங்களையும் குற்ற ஆவணங்கள் சிலவற்றையும் போலீஸார் கைப்பற்றினர்.

கோவையில், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 7 இடங்களில் சோதனைகள் நடத்திய சில நாட்களுக்குப் பின்னர் முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டார்.

இவர் தமிழ்நாட்டின் ஐஎஸ்ஐஎஸ்ஸின் முக்கிய சூத்திரதாரி ஆவார். இவர், இலங்கை ஈஸ்டர் பண்டிகையின்போது குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் கர்த்தாவாகச் செயல்பட்ட சஹ்ரான் ஹாஷிம் என்பவரின் ஃபேஸ்புக் நண்பராக உள்ளார்.

முகம்மது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் ஷபிபுல்லா மூவரும் ஐஎஸ்ஐஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்கள் என்றும் சமூக ஊடகங்களில் பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தத்தைப் பரப்புவதும், ஈஸ்டர் பண்டிகை குண்டுவெடிப்பின் சூத்திரதாரியாகச் செயல்பட்டதோடு, இங்கும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படுபவர்களுக்கு இவர்கள் ஆதரவளித்து வந்துள்ளதாகவும் வந்த தகவல்களை அடுத்து இச்சோதனைகள் நடத்தப்பட்டன.

கோவை போத்தனூர் போலீஸார் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களான முகமது உசேன், ஷாஜகான், ஷேக் ஷபிபுல்லா ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இன்று 2-வது நாளாக விசாரித்தனர். இவர்கள் மூவரும் இன்று மாலை கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் 18, 38 மற்றும் 39 பிரிவுகளின் கீழ் முகமது உசேன், ஷாஜகான், ஷேக் ஷபிபுல்லா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மூவரும் இன்று காலை மருத்துவப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் கோவை முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சக்திவேல் முன் அவரது இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

வாரத் தொடக்கத்தில் இருவர் கைது

இந்த வாரத் தொடக்கத்தில், ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக கோவையைச் சார்ந்த முகமது அசாருதீன் மற்றும் ஷேக் ஹிதயதுல்லா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்