சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர், ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வி (25). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கடந்த 3 மாதங்களாக சென்னையில் பெண்கள் விடுதியில் தங்கி, சேத்துப்பட்டில் ஈகா தியேட்டர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
தனது மாவட்டத்தை சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞருடன் செல்வி பழகி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் செல்வி நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேந்தர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல் வியை வெட்டினார். இதில், அவ ரின் இடது தாடையிலும், இடது கை சுண்டுவிரலிலும் வெட்டுப் பட்டு ரத்தம் கொட்டியது.
அலறல் சத்தம் கேட்டு, அருகே இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதற்குள், அங் கிருந்து ஓடிய சுரேந்தர், அப்போது வந்த மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அங்கு இருந்தவர்கள் செல்வியை கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், சுரேந்தரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டுசென்றனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இளம்பெண் மீதான தாக்குதலுக்கு, காதல் பிரச்சினை காரணமா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2016 ஜூன் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட் டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ராம்குமார், சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக அறி விக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago