ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர்; ரூ.65 கோடி ஒதுக்கீடு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

By செய்திப்பிரிவு

குடிநீர் திட்டப் பணிகளுக்கு கூடுதலாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள குடிநீர் விநியோகம் பற்றி விரிவான ஆய்வு நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

மாநிலம் முழுவதும் சீராக குடிநீர் வழங்கும் வகையில், இந்த ஆண்டு, ஏற்கெனவே ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு, முதல்வர், குடிநீர் திட்டப் பணிகளுக்கு கூடுதலாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இன்று ஆணையிட்டார். இத்தொகை பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில் மூலமாக கொண்டு வந்து சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக தனியாக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 secs ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்