வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "9.5.2014 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நெருப்புக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மனைவி சரோஜா; 10.5.2014 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக் காட்டிற்கு அருகே ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், மிட்டாமீடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்டசுப்பு ரெட்டி என்பவரின் மகன் வெங்கட்ட ரெட்டி ஆகியோர் காட்டு யானைகள் தாக்கியதில் உயிரிழந்தனர்.
17.5.2014 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், அய்யர்பாடி தேயிலைத் தோட்டம் அருகே காட்டெருமை தாக்கியதில் அய்யர்பாடி பகுதியைச் சேர்ந்த வீரன் என்பவரின் மகன் சோமசுந்தரம் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் செய்திகளை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வனத் துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
ஜோதிடம்
37 mins ago
ஜோதிடம்
52 mins ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago