தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், கோவையில் நேற்று கூறியது: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக, 26 நாடுகளில் இருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 6 மில்லியன் டாலர் இலக்கை எட்டியுள்ளோம். 9,800 பேருக்கு மேல் பங்களித்துள்ளனர்.
தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் ரூ.2.6 கோடி கிடைத்துள்ளது. பிப்ரவரி வரை 5.6 மில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.36 கோடி கிடைத்துள்ளதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எனினும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திடம் நிதி கணக்கு இறுதி அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அந்த அறிக்கை கிடைக்கும் என தெரிகிறது. இந்த விவரத்தை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
48 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago