திமுகவினருடன் கலந்து பேசி கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் ஏப்ரல் 2, 7, 16, 23 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இடங்களை பகிர்ந்து போட்டி
கிராம அளவிலான கூட்டுறவு சங்கங்கள் தொடங்கி அனைத்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வாய்ப்புள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட வேண்டும். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், ஒருமித்த கருத்துள்ள பிற கட்சிகளுடன் கலந்துபேசி வாய்ப்புள்ள இடங்களை பகிர்ந்து கொண்டு கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாவட்டத் தலைவர்களும் வட்டார, நகர, கிளை அளவிலான கட்சி அமைப்புகள், அணிகளின் நிர்வாகிகளோடு கலந்து பேசி கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போட்டியிடும் இடங்கள் பற்றிய விவரங்களை கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
தமிழகம்
6 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago