தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதம்: தயாநிதி அழகிரி சாடல்

By ஸ்கிரீனன்

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை தயாநிதி அழகிரி சாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் 'வாரணம் ஆயிரம்', 'மங்காத்தா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான 'வடகறி' படத்தினை தயாரித்தவரும் தயாநிதி அழகிரி தான்.

இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டம் செய்து வருகிறார்கள். இதனைத் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் தளத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டம் குறித்து, "இன்று தமிழ் திரையுலகினர் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மேற்கொள்கிறார்களா? அல்லது நீதிமன்றத்தைக் கண்டித்து போராடுகிறார்களா?வரி விதிப்பு மற்றும் 'தலைவா', 'விஸ்வரூபம்' போன்ற படங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைப் போராட்டம் மேற்கொள்வதற்கு முன் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். தமிழ் திரையுலகினருக்கு இந்த சிந்தனையில்லை. பயம் மட்டும் தான் அண்டா அண்டாவாக இருக்கிறது. ஹா ஹா ஹா. " என்று தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 secs ago

சுற்றுலா

22 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

35 mins ago

உலகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

7 hours ago

மேலும்