பணம் பெற்றுக்கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஊசி மூலம் போதை மருந்து செலுத்திய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளின் முன்பு சிலர் நின்றுகொண்டு மாணவர்களுக்கு போதை மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீஸுக்கு புகார் வந்தது. அதன்பேரில் கன்டோன்மென்ட் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருமண்டபம் சாலையில் உள்ள ஒரு கல்லூரியின் விடுதி அருகே நின்ற ஒரு காரில் போதை மருந்து, மாத்திரைகள், காலி சிரிஞ்சுகள் இருந்தன.
இதையடுத்து, அந்த காரில் இருந்த 3 இளைஞர்களைப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் பீமநகர் நியூ ராஜா காலனியைச் காஜாமைதீன்(22), கீழ ஆண்டாள் தெரு பிடாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வினோத்(25), டிவிஎஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியைச் சேர்ந்த யுரேன்சந்த்(21) என்பது தெரியவந்தது. அவர்கள், மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்ததும், ஊசி மூலம் மாணவர்களுக்கு போதை மருந்து செலுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்து, போதை மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago