புதுச்சேரியில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி விகிதம் 94.78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.43 சதவீதம் அதிகம். அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை விட 10.83 சதவீதம் உயர்ந்து 89.17 சதவீதமாகியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியானது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 6,949 மாணவர்களும், 7,906 மாணவிகளும் என மொத்தம் 14,855 பேர் தேர்வு எழுதினர். இதில் 6,465 மாணவர்களும், 7,615 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 94.78 சதவீதம். இது கடந்த ஆண்டை விட 5.43 சதவீதம் அதிகம்.
இதில் புதுச்சேரி பிராந்தியத்தில் 95.03 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.64 சதவீதம் அதிகம். காரைக்கால் பிராந்தியத்தில் 93.13 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9.75 சதவீதம் அதிகமாகும்.
அரசுப் பள்ளிகளில் 10.8% தேர்ச்சி அதிகரிப்பு
புதுச்சேரி பிராந்தியத்தில் அரசுப் பள்ளிகளில் 88.64 சதவீதம தேர்ச்சி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9.97 சதவீதம் அதிகம். காரைக்கால் பிராந்தியத்தில் 90.87 சதவீத தேர்ச்சி வந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 13.72 சதவீதம் அதிகம். புதுச்சேரி, காரைக்கால் சேர்ந்து 89.17 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. மொத்தமாக கடந்த ஆண்டை விட 10.83 சதவீதம் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.
புதுச்சேரி பிராந்தியத்தில் நூறு சதவீத தேர்ச்சயை 5 அரசுப் பள்ளிகளும், 55 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 60 பள்ளிகள் பெற்றுள்ளன. காரைக்கால் பிராந்தியத்தில் தனியார் பள்ளிகள் 4 மட்டும் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தம் 64 பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
ஓடிடி களம்
36 mins ago
கல்வி
50 mins ago
சினிமா
58 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago