கரும்புச்சாறு பிழிந்தும், பெண்க ளுக்குத் தண்ணீர் வண்டியை தள்ளியும் வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை பொதுமக்கள் வியப்பாக பார்க்கின்றனர்.
ராமநாதபுரத்தில் பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 23 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பகுஜன் சமாஜ் வேட் பாளர் பஞ்சாட்சரம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரி ஆகியோர் ஓரளவு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்கள் உள்ளாட்சித் தேர்தல் போல் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிக் கின்றனர்.
பகுஜன் சமாஜ் வேட்பாளர் பஞ்சாட்சரம் முதுகுளத்தூர் அருகே செம்பொன்குடியைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், ராமநாதபுரம் மாவட்ட பெண்கள் குடிநீருக்காகப் பல கி.மீ. அலைவதை அறிந்தவர். அதனால் தன்னால் முடிந்தவரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில ஆண்டுகளாக மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறார். இவர் முதுகுளத்தூர் பகுதியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும்போது பெண்கள், சிறுமிகள் நீண்ட தூரம் தள்ளுவண்டிகளில் தண்ணீர் குடங்களை எடுத்து வந்தால் அவர்களுக்கு உதவும் வகையில், தண்ணீர் வண்டியை தள்ளி, வீட்டுக்குக் கொண்டு போய் சேர்த்து விடுகிறார். அப்படியே வாக்கு சேரிக்கிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரி, 2 நாட்களுக்கு முன்பு கமுதியில் கரும்புச்சாறு கடை ஒன்றில் சாறு பிழிந்தார். அந்தக் கடை உரிமையாளரிடம் அனுமதி பெற்று சாறு பிழிந்து தன்னுடன் வந்தவர்கள், பொது மக்களுக்கு வழங்கி, தானும் குடித்தார். அதன் பின் அப்பகுதியில் வாக்கு சேகரித்தார். பி.எஸ்சி., பட்டதாரியான புவனேஸ்வரி விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். மற்ற வேட்பாளர்கள் போல் கார்கள் புடை சூழ வராமல் மக்களோடு மக்களாக நின்று இவர்கள் வாக்கு சேகரித்தது சற்று வித்தியாசமாக இருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
26 mins ago
கல்வி
40 mins ago
தமிழகம்
52 mins ago
கல்வி
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago